வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

Update: 2021-10-25 20:34 GMT
பேரையூர்
திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள எம்.சுப்புலாபுரம் அருகே நேற்று காலையில் புள்ளிமான் ஒன்று வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. சம்பவம் அறிந்த சாப்டூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி மற்றும் வாட்சர் சரவணகுமார் ஆகியோர் இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக டி.கல்லுப்பட்டி கால்நடைத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இறந்த ஆண் புள்ளிமானுக்கு இரண்டு வயதாகும்.

மேலும் செய்திகள்