புதிதாக 71 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-27 17:20 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 963 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 4,017 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 470 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 71 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 865 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 682 பேர் பலியாகி உள்ளனர்.
------------

மேலும் செய்திகள்