மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு;

Update:2021-10-29 01:59 IST
மதுரை
மதுரை புதூர், மகாலட்சுமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கிரிஜா (வயது 63). இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்