உத்திரமேரூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

உத்திரமேரூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-07 05:25 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திணையாம்பூண்டி காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 42). இவருக்கு குப்பு என்ற மனைவியும் 2 மகன், ஒரு மகளும் உள்ளனர். முனுசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வயிற்று வலியும் தொடர்ந்து இருந்து வந்தது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி குப்பு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார். தூக்குப்போட்டு இறந்த முனுசாமி கடந்த ஆண்டும் இதேபோல் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்