4 வயது குழந்தை மர்மச்சாவு

4 வயது குழந்தை மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.;

Update:2021-11-07 23:34 IST
மதுரை,
மதுரை வண்டியூர் பாலாஜி நகர் 4 -வது தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஹரி வேலன் (வயது 4). சம்பவத்தன்று குழந்தை ஹரி வேலனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த குழந்தை மர்மமாக உயிரிழந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்