பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 33). சம்பவத்தன்று இவர், மதுரை சிந்தாமணி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், முத்துமாரி அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.