விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

சோழவந்தான் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-21 19:36 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள உடன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நீதி. இவருடைய மகள் தன்யா(வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். முறையாக பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த மாணவி தன்யா கடந்த 17-ந் தேதி விஷம் குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாணவி இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்