போலீஸ்காரரை தாக்கியவர் கைது

மதுரையில் போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.;

Update:2021-11-22 02:20 IST
மதுரை,

மதுரை போக்குவரத்து காவல் பிரிவில் போலீஸ்காரராக பணி செய்பவர் ராஜ்குமார். சம்பவத்தன்று இவர் அழகர்கோவில் சாலை சர்வேயர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணாநகரை சேர்ந்த அய்யப்பன் (வயது 53) என்பவர், சாலை விதிகளை மீறி உள்ளார். இதனை தட்டிகேட்ட, போலீஸ்காரர் ராஜ்குமாரை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பாலை போலீசார் அய்யப்பனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்