ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Update: 2021-11-21 21:07 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 374 பேருக்கு பரிசோதனை செய்ததில், 73 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. 
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 5 ஆயிரத்து 696 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 192 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 694 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 810 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்