கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்ட ஒரு நபர் ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவரது பெயர் முத்துகுமார் (வயது 40)என்பதும், அவர் கிணத்துக்கடவு கிருஷ்ண புரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.