தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடு நடைபெற்றது.

Update: 2021-11-28 19:52 GMT
மதுரை,

மதுரை புதுவிளாங்குடி கணபதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியரான இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்