தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

Update: 2021-11-29 13:32 GMT
தொழிலாளி தற்கொலை
கோவை

கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 58). ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தபோதிலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த வடிவேல் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். 


இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்