தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை

கோபி அருகே தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2021-11-30 15:20 GMT
கோபி அருகே தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய் இறந்தார்
கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். அவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 34). திருமணம் ஆகாதவர். கூலி வேலை செய்து வந்தார்.
கோபாலகிருஷ்ணனின் தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கோபாலகிருஷ்ணன் தந்தையுடன் வசித்து வந்தார். தாய் இறந்ததால் கோபாலகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு் தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் உள்ள கொக்கியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----

மேலும் செய்திகள்