போத்தனூர்
கோவை ஈச்சனாரி ராஜ விஜயநகரை சேர்ந்தவர் ஹரிராம பிரசாத். இவருடைய மனைவி வாசுகி (வயது27). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவர்களுடன் வாசுகியின் தாய் சரஸ்வதியும் (78) வசித்து வருகிறார். ஹரிராமபிரசாத், வேலை விஷயமாக வெளியே சென்றார். வீட்டில் வாசுகி இருந்த போது மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து வாசுகியின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க நகைகளை பறித்தனர்.
அப்போது வாசுகியின் மகள் அழத்தொடங்கியது. உடனே அந்த குழந்தையை மிரட்டி அமைதியாக இருக்க செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.