விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை

Update: 2021-12-20 16:28 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வேலை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று வடக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், கொண்டேகவுண்டன்பாளையம், கருமாபுரம் ஊராட்சிகளில் 2 மாதமாக 100 நாள் வேலை திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கவில்லை. எனவே மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்