ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.;

Update:2021-12-25 02:30 IST
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 45 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 521 ஆக உயர்ந்தது. 
இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 275 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 52 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 536 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 710 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்