சரவணம்பட்டி
எஸ்.எஸ்.குளம் அருகே அத்திப்பாளையத்தை சேர்ந்தஜெயபால் என்பவரது மனைவி பூந்தளிர்(வயது 34). ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் கீரணத்தம் மயானம் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.