75 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி

கோவை மாவட்டத்தில் 75 பேர் கொரோனா தொற்று உறுதியானது. மூதாட்டி பலியானார். ஒமைக்ரான் பாதித்த முதியவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

Update: 2022-01-01 16:32 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் 75 பேர் கொரோனா தொற்று உறுதியானது. மூதாட்டி பலியானார். ஒமைக்ரான் பாதித்த முதியவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

75 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா நோய்த் நேற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 446 ஆக உயர்ந்து உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,516 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 91 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 41 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒமைக்ரான் பாதிப்பு

லண்டனில் இருந்து கோவை வந்த 69 வயது முதியவர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டார். அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

மேலும் செய்திகள்