செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,696 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,696 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-11 11:02 GMT
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,555 பேர் உயிரிழந்துள்ளனர். 7,480 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 508 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 75 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,271 பேர் உயிரிழந்துள்ளனர். 1,773 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்