திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 931 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2022-01-13 09:30 GMT
தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து நேற்று கொரோனா தொற்றால் 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 484 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,871 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் ஒருவர் பலியாகி உள்ளார்.

மேலும் செய்திகள்