கோவையில் 1,732 பேருக்கு கொரோனா

கோவையில் 1,732 பேருக்கு கொரோனா

Update: 2022-01-15 15:44 GMT
கோவை

கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின்படி கோவையில் 1,732 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 884 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 529 பேர் இறந்து உள்ளனர். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 582 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 875 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 7 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்