செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,377 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,377 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2,377 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,377 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 507-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 773 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,576-ஆக உயர்ந்துள்ளது. 18,158 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 676 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 80 ஆயிரத்து 37 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,283-ஆக உயர்ந்துள்ளது. 5,356 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.