புதுக்கோட்டையில் 206 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டையில் 206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-01-23 17:52 GMT
புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 113 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 471 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்