மேலும் 177 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-23 20:53 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 177 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,229 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 17,048 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 402 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,609 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 248 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 12,626 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 252 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்