செல்போன் கடையில் திருடிய 3 சிறுவர்கள் சிக்கினர்

செல்போன் கடையில் திருடிய 3 சிறுவர்கள் சிக்கினர்.

Update: 2022-01-23 21:23 GMT
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32). இவர் பைப்பூர் பஸ் நிறுத்தம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையில் இருந்த 4 செல்போன்கள், ரூ.3,650 ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆனந்தன் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்தன் செல்போன் கடையில் திருடியது பனமரத்துப்பட்டியை சேர்ந்த 15 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்