சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை...!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.
சென்னை,
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை மிதமான மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்துள்ளது. கிண்டி, மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.