மோதிய வேகத்தில் மரத்தில் ெதாங்கியபடி உயிருக்கு போராடிய விவசாயி

மோதிய வேகத்தில் மரத்தில் ெதாங்கியபடி உயிருக்கு போராடிய விவசாயி-மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

Update: 2022-01-24 18:08 GMT
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமரத்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் மலையான்(வயது 40). விவசாயி. மேலும் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலை வழியாக அ.காளாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காளாப்பூர் பெரிய பாலம் அருகில் பாலத்தின் திருப்பத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்கிருந்த மரத்தில் மோதினார். மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்தே மலையான் மரத்தின் மேல் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மரத்தில் தொங்கியபடி கிடந்தார். அந்த நேரம் அப்பகுதியில் யாரும் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே கிடந்தார். பின்னர் காலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மரத்தில் இருசக்கர வாகனத்துடன் தொங்கி கொண்டிருந்த மலையானை மீட்டனர். மேலும் அவரை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்