மேலும் 519 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-01-25 19:25 GMT
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 53,450 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 49,414 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 372 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,484 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்