போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-01-25 19:30 GMT
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்(வயது 55). இவர் தேவகோட்டையில் சித்தா கிளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் இளங்கோமகேஸ்வரன் அந்த பகுதியில் சென்றபோது அவரது கிளினிக்கில் ஆய்வு செய்தார். அப்போது  அவர் படித்த சான்றிதழ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவரிடம் சரியான சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. தேவகோட்டை டவுன் போலீசார் போலியாக மருத்துவம் பார்த்ததாக கூறி சேவியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்