மகனை கொன்ற தந்தை கைது

மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.;

Update:2022-01-26 23:40 IST
சிவகங்கை, 
சிவகங்கை அண்ணாநகரைச் சேர்ந்தவர் மாரி (வயது52) இவரது மனைவி சித்திரைவேலு (45). இவர்களுக்கு மகேந்திரன் (25) என்ற மகன் இருக்கிறான். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மகேந் திரன் குடிபோதையில் தாயாரிடம் தகராறு செய்தாராம். இதைப்பார்த்த மாரி மகனை கண்டித்தாராம். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரி அங்கிருந்த கிரைண்டர் கல்லால் மகேந்திரனை தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரனை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்