தீக்குளித்து வாலிபர் தற்கொலை

பெரியார் பஸ் நிலையம் அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-26 19:28 GMT
மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 24). கடந்த 4 ஆண்டுகளாக இவர் காசநோய் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் குடும்பத்தினரால் தனித்துவிடப்பட்டார். குடும்பத்தினர் தன்னை கண்டு கொள்ளாததால் மனமுடைந்த மாரிமுத்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம் அருகே அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து பெரியார் பஸ் நிலையத்தில் இருந்த திடீர்நகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்