வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு

சாத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றனர்.

Update: 2022-01-26 19:38 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே சிந்தபள்ளியை சேர்ந்தவர் சவுரியம்மாள் (வயது 44). இவரது கணவர் பெரியசாமி. இவர்களது மகள் வீர காளீஸ்வரி. இவர்கள் 3 பேரும் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் சாவி வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில்  மதியம் வீட்டிற்கு வந்த வீரகாளீஸ்வரி பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை உடைத்து  அதில் இருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சவுரியம்மாள் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த  மணிகண்டனை (38)  கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்