பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

திருவாரூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-01-26 21:00 GMT
திருவாரூர்:
திருவாரூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது ெசய்யப்பட்டாா்.
வாலிபா் கைது
திருவாரூர் அருகே உள்ள ஓடாச்சேரி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜராஜ சோழன் (வயது 27). கொத்தனார். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலி்ல் தனியாக வேலை பார்த்து கொண்டிருந்த 55 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 இதனால் பாதிக்கப்பட்ட பெண், திருவாரூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜராஜ சோழன் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜ சோழனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்