மேலும் 489 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-01-27 19:47 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 54,482 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 50,353 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 518 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,577 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. 

மேலும் செய்திகள்