கொரோனாவுக்கு 3 பேர் பலி

தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

Update: 2022-01-27 20:24 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 509 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70, 59 வயதுடைய மூதாட்டிகள், 44 வயதுடைய ஆண் என 3 பேர் பலியானார்கள். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,024 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்