கார் மோதி உப்பு வியாபாரி பலி

கார் மோதி உப்பு வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2022-01-27 22:06 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவ சிவக்குமார் (வயது 44). உப்பு வியாபாரியான இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் மேல கருங்குளம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மாதவ சிவக்குமார் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்த மாதவ சிவக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்