2 பேர் கைது

12 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-28 17:47 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டூரணி இரட்டை ஆலமரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவர்களை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் தடைசெய்யப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ராமநாதபுரம் வசந்தநகர் முதலாவது தெரு தவ்பீக் கான் (வயது43), பரமக்குடி அக்ரஹாரம் தெரு ராமஜெயம் (59) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்