பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண்

பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண்

Update: 2022-01-29 19:37 GMT
சாத்தூர்
சாத்தூர் அருகே படந்தால் தென்றல் நகரை சேர்ந்தவர் மாலா என்ற நாச்சியார் (வயது 37). இவரது கணவர் ரமேஷ், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தற்போது ராஜபாளையத்தில் இருந்து வருகிறார். மாலா கடந்த 3 மாத காலமாக தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டை 3 நாட்களுக்கு முன்பு பூட்டிவிட்டு வீட்டினுள்ளேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 3 நாட்களாக கதவு திறக்கப்படாத நிலையில் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி சாத்தூர் நகர் போலீசார் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாலா இறந்து கிடந்தார். சாத்தூர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் இறந்து இருக்கலாம் என ேபாலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்