பண்ணை வீட்டை விபச்சார வீடுதியாக மாற்றிய 2 பேர் கைது

கர்நாடகாவின் ஷிமோகா நகர் அருகே பண்ணை வீட்டை விபச்சார வீடுதியாக பயன்படுத்திவந்த 2 பேர் கைது.

Update: 2022-01-30 08:59 GMT
பெங்களூரு,

கர்நாடகாவின் ஷிமோகா நகர் அருகே சோகானே பகுதியில் பண்ணை வீட்டில் விபச்சாரத் தொழில் நடப்பதாக ஷிமோக மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் உரிமையாளர் முனியப்பன் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டு மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்