திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 640 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-30 14:32 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 6,027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,910 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 3 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்