ரூ.1½ லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-30 15:17 GMT
காரைக்குடி, 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகே தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது அந்த காரில் ரூ. 1½ லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் தொழிலதிபருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தது. ஆனாலும் இப்பணம் குறித்து சரியான கணக்கு விவரங்களை காட்ட இயலாதநிலையில் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்