முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-01-30 15:34 GMT
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேர புத்தூரைச்
சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 83). 

விவசாயி. இவர் கடந்த ஓராண்டாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல்நலம் தொடர்ந்துபாதிக்கப்பட்டுஅவதிப்பட்டு வந்தார்.இதனால், விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம்வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.

 மயங்கி கிடந்தஅவரை குடும்பத்தினர் மீட்டு, கோவை அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்