கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்தனர்

Update: 2022-01-30 20:15 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 563 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 4,817 பேர் உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 83 வயது முதியவர் 3 பேர், 70 வயது முதியவர் ஒருவர் மற்றும் 82 வயது மூதாட்டி ஒருவர் என 5 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில் இதுவரை 1,134 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்