லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

லாரி டிரைவர் விஷம் குடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்

Update: 2022-01-30 21:23 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள பண்டாரகுளம் பகுதியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 42). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மந்திரமூர்த்தி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்