பொதுஇடங்களில் முககவசம் அணியாத 395 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத 395 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-01-31 13:07 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட முக கவசம் அணியாத 395 பேருக்கு மொத்தம் ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 பேருக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்