வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.;
பொள்ளாச்சி
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.
வனப்பகுதியில் வறட்சி
பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் மற்றும் பல்வேறு வனவிலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் உள்ளன.
இந்த நிலையில் தற்போது மழை பொழிவு குறைந்ததால் வனப் பகுதி பசுமையை இழந்து வருகிறது.
வனப்பகுதி வறண்டதால் காட்டுதீ ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
விழிப்புணர்வு
எனவே சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பொருட்களால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க ஆனைமலை புலிகள் காப் பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் கணேசன் ஆகியோரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. இதில் வனவர் சதீஷ், வனத்துறை யினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
சிறப்பு குழு அமைப்பு
வன பகுதியில் காட்டு தீப்பிடிப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் இலைகள் உதிர்ந்து மரங்கள் காய்ந்து விட்டன.
எனவே சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு வரக் கூடாது. விதிமுறை களை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.