நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தாம்பரம் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.;
வருகிற 19-ந் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி மற்றும் மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் குரோம்பேட்டை எம்.ஐ.டி.கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.