செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,198 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.;

Update:2022-02-03 18:26 IST
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 211-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,629- ஆக உயர்ந்துள்ளது. 11,786 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 389 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 492 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 87 ஆயிரத்து 243 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,288 -ஆக உயர்ந்துள்ளது. 3,961 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்