தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

Update: 2022-02-10 10:25 GMT
வெள்ளகோவில் நகராட்சி, தேர்தலில் பணியாற்றும் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் 1, வாக்குப்பதிவு அலுவலர் 3, ஆகியவர்களுக்கு மண்டல அலுவலர்களால் பயிற்சி வகுப்பு  வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேர்தலில் பணியாற்ற உள்ள 150 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அலுவலகத்தினர் செய்திருந்னர். பயிற்சி வகுப்பிற்கு வந்த தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களை வெப்ப மானி வைத்து பரிசோதித்து சானிடைசர் கொடுத்து உள்ளே அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்