கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று 87 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 324 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 24 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,571 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.